Tuesday, January 10, 2012

சூர்ப்பனகை



சூர்ப்பனகை

ரகசியங்கள் வழிந்து கொண்டிருக்கின்றன
சகல துவாரங்களிலிருந்தும்.
சதுரத்துக்குள் பொருந்தாத
ஓவியத்திலிருந்தவள்
சமாதானமடைய
கோடுகளால்
நிரம்பியிருந்த
அவளுருவத்தை
ஒரு முறை புணரச்சொன்னாள்
வளைக்கவளைக்க
வளரத்தொடங்கியது
குறுகின இடையை
வளைத்த என் கரங்களிலொன்று.
பருத்த மார்புகளை
சுமக்கவியலாது
நான் நசுங்கினேன்.
என் ப்ரேதத்தை
கணப்பொழுதில்
உயிர்ப்பிக்கும் சாபத்தைப்
பிரயோகித்தபடியே
“பேடி” என்றவாறே
தூக்கியெறிகையில்
என்னைப் பழப்பித்துத் தருவதாய்க்
கிசுகிசுத்தவள்
பதிலாய்த் தன் பசிக்குணவாய்
நீலவுடலனைக்
கேட்டுக் கெக்கலிக்கிறாள்.

No comments:

Post a Comment